பக்கம்:சமுதாய வீதி.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 0 6 சமுதாய வீதி

அனுப்புவார்கள்-என்றார் அப்துல்லா.

'அந்தப் பாக்கியத்தைத் தயவு செய்து எங்களுக்கும் அளிக்கலாமல்லவா?'- என்று அவரைக் கெஞ்சத் தொடங்கினான் கோபால். மாதவியும் முத்துக்குமரனும் ஒன்றும் பேசாமல் இருந்து விடவே, "நீங்க மட்டும். தானே சொல் lங்க மிஸ்டர் கோபால், மாதவி ஒண்ணுமே சொல்ல வில்லையே? இந்த ப்ராவின்ஸ் வெல்லெஸ்லியி லேருந்து என் கையாலே காக்டெயில் கலந்து குடிக்க ணும்னு தினம் எத்தினியோ கோடீசுவரன் இங்கே தேடி வந்திட்டுப் போறான், மாதவியம்மா மட்டும் வாயைத் திறக்கவே மாட்டேங்கிறாங்க...'

அவளுக்குப் பழக்கமில்லே. வாத்யாரு வேணா ஒருகை பாப்பாரு'-என்று முத்துக்குமரன் பக்கமாகப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான் கோபால். ஆனால் அப்துல்லர் சிறிதும் அயராமல் மீண்டும் மாதவியைப் பற். நியே பேசலானார்.

'அதெப்படி இத்தினி காலமா மாதவியம்மா சினி மாத் துறையிலேயே இருந்திருக்காங்க...இன்னும் இந்தப் பழக்கம் இல்லேங்கிறது வேடிக்கையாவில்ல இருக்கு?’’

மாதவி இதற்கு மறுமொழி எதுவும் கூறவில்லை. அப்துல்லாவின் வேலையாள் டேபிளில் காக்டெய்ல் மிக்ஸ் பண்ணுவதற்காக பலவகை மதுப் பாட்டில்களை யும் கோப்பைகளையும் கொண்டு வந்து வைத்தான். பளிரென்று பல வண்ணங்களில், பல வடிவங்களில் மின் னும் அந்த கிளாஸ்களையும், கோப்பைகளையுமே கண் களில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது. பொன் நிறக் கோடுகளால் சித்திர வேலைப்பாடுகள் செய்திருந்த அந்தக் கோப்பைகளையும், அவற்றின் நளினத்தையும், அழகையுமே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண் டிருந்தான் முத்துக்குமர்ன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/208&oldid=561008" இலிருந்து மீள்விக்கப்பட்டது