பக்கம்:சமுதாய வீதி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 3岁

செக்ரட்டரியைக் கலந்துக்கிடணும். இன்கம் டாக்ஸ்தொந்தரவு இல்லாமப் போக வழியுண்டான்னு தெரிய வேண்டியது முக்கியம். அந்தத் தொந்தரவை ஓரளவு குறைக்கிறதுக்காகத்தான் நான் இதைத் தொடங்கனும்ணே முடிவு பண்ணினேன். இதைத் தொடங்கினதினாலே அது அதிகமாயிடப்பிடாது.”

'ஒகோ! ஒரு கலைக்குப் பின்னால் கலையல்லாத இத் தனை காரணங்களை யோசிக்கணும்...என்ன?

'கலையாவது ஒண்ணாவது. கையைப் பிடிக்குமா, பிடிக்காதான்னு முதல்லே பார்க்கத் தெரிஞ்சுக்கணும்?

'ஓகோ புதுசா இப்பத்தான் நான் இதெல்லாம் கேள்விப்பட றேண்ட கோபாலு.'

என்னதான் சுபாவமாகவும் சகஜமாகவும் பழகினா லும் கோடீஸ்வரனாகவும், நடிகர் திலகமாகவும் ஆகி விட்ட தன்னை முத்துக்குமரன் அடாபிடா போட்டுப் பேசுவதைக் கோபால் ரசிக்கவில்லை. ஒவ்வொரு டா”வும் முள்ளாகக் குத்தியது. ஆனால், அதே சமயத்தில் முத்துக் குமரனின் கவிதைச் செருக்கும், தன்மானமும், பிடிவாத மும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தவை. ஆகவே, முத்துக் குமரனுக்கு அவன் பயப்படவும் செய்தான். பதிலுக்குப் பழி வாங்குவது போல் தானும் அவனை 'அடா போட்டுப் பேசலாமா என்று ஒருகணம் குரோதமாகத் தோன்றினா லும் அப்படிச் செய்யத் தைரியம் வரவில்லை நீ, நான் போன்ற ஒருமைச் சொற்களும் வாத்தியாரே போன்ற பெயரும்தான் தைரியமாகக் கூற வந்தன. முத்துக்குமரன் என்ற, ைத்ரியசா வியோடு மேடையில் ஸ்திரி பார்ட் போட்ட காலங்களில், நாதா! தங்கள் சித்தம் என் பாக் கியம்' என்று நாணிக் கோணிக்கொண்டு அன்று கூறிய நிலையே இன்னும் நீடித்தது. முத்துக்குமரனை மீறி நிற்க முடியாத மனநிலை இன்னும் அவனிடம் இருந்தது. அந்தப் பிரமையிலிருந்து அவினால் இன்னும் விடுபட முடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/31&oldid=560824" இலிருந்து மீள்விக்கப்பட்டது