பக்கம்:சமுதாய வீதி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - +7

"நான் ஸ்டுடியோவுக்குப் புறப்படறேன் வாத்தி யாரே! எது வேணும்னாலும் பையனிட்டக் கூச்சமில்லா மக் கேட்டுக்கலாம். ஸ்டுடியோவிலிருந்து அப்புறம் ஃபோன் பண்றேன்...நாடகம்...ஜல்தி தயாராகட்டும்...' -

"அது சரி! இதென்னமோ கவர்லே போட்டு அனுப் பிச்சிருக்கியே, இதுக்கென்ன அர்த்தம்னு புரியவியே! உங்கிட்ட நிறைய இருக்குங்கறதை எனக்குக் காமிக் கிறியா?”

சே. சே! எதையாவது உளறாதே வாத்தியாரே... கம்மாகைச் செலவுக்கு இருக்கட்டும் வச்சுக்க...' -

'வெள்ளைத் தாளா இருந்தாலும் கவிதை எழுத லாம். ரூபாய் நோட்டாவில்ல இருக்குது இது?"

என்று முத்துக்குமரன் பதில் கூறியதைக் கேட்டு எதிர்ப்புறம் கோபால் கலகலவென்று வாய்விட்டுச் சிரித் தான். உரையாடல் முடிந்தது. கோபால் படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டான். முத்துக்குமரனுடைய மனநிலை, அகம்பாவம் எல்லாம் கோபாலுக்கு நன்றாகத் தெரியுமா தலால் "படப்பிடிப்புப் பார்க்க வா-ஸ்டுடியோவைச் சுற்றிப் பார்க்க என் கூட வா-என்றெல்லாம் உபசாரத் துக்காகக் கூட அவனைக் கூப்பிடவில்லை. சாதாரணமாக வெளியூரிலிருந்து முதல் தடவையாகப் பட்டினத்துக்கு வருகிறவன் ஒரு சினிமா ஸ்டுடியோவைப் பார்க்க வேண்டு மென்பதை எவ்வளவு பெரிய ஆர்வமாகக் கொண்டிருப் பானோ அவ்வளவு பெரிய ஆர்வமாக முத்துக்குமரன் அதைக் கொண்டிருக்க மாட்டான் என்பது கோபாலுக் குத் தெரியும்.

-பகல் பன்னிரண்டு மணிக்குள் பேசுவதற்கு விஷயத் துடனோ, விஷய்மின்றியோ, மாதவி நான்கைந்து முறை. முத்துக்குமரனுக்கு ஃபோன் செய்துவிட்டாள்... . --மதுரையில் இருந்தவரை டெலிஃபோன் என்ற கருவியை இப்படி இத்தனை விதமாக இத்தனை அவசிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/49&oldid=560842" இலிருந்து மீள்விக்கப்பட்டது