பக்கம்:சமுதாய வீதி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி of r

"நீங்கள் எழுதும் வசனங்களைவிடப் பேசும் வசனங் கள் மிகவும் நன்றாகயிருக்கின்றன...'

"அது கலை! இது வாழ்க்கை: கலையைவிட வாழ்க்கை அழகாகவும், சுபாவமாகவும் இருப்பது இயல்பு தானே?"

பேசிக்கொண்டே இருவரும் புறப்பட்டார்கள். மாதவியின் வீட்டில் இரவு விருந்திற்கு மலையாளச் சமை யல் பிரமாதமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. தேங்காய் எண்ணெய் மணம் கமகமத்தது. நடுக்கூடத்தில் பொருத்தி வைத்திருந்த சந்தன் வத்தியின் நறுமணமும், மாதவியின் கூந்தலில் சூடியிருந்த மல்லிகைப் பூ மணமும், சமையலின் வாசனையுமாகச் சேர்ந்து அந்த சிறிய வீட்டிற்குத் திருமண வீட்டின் சூழ்நிலையை உண்டாக்கியிருந்தன.

டைனிங் டேபிள் எளிமையாகவும் அழகாகவும் அலங் கரிக்கப்பட்டிருந்தது. தான் பரிமாறுவதாகக் கூறி அவர் கள் இருவரையுமே சாப்பிட உட்கார வைத்து விட்டாள் மாதவியின் தாய்.

டைனிங் டேபிளில் மாதவியின் தாய் பறிமாறிக் கொண்டிருந்த போது-ஹாலின் சுவரில் மாட்டியிருந்த படங்களை நோட்டம் விட்டான் முத்துக்குமரன், எல் லாப் படங்களையும் விட ஒரு படம் அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு நேர் எதிரே நிமிர்ந்தால் உடனே பார்வையிற் படுகிற விதத்தில் இருந்தது. அந்தப் படத்தில் நடிகன் கோபாலும் மாதவியும் சிரித்துக் கொண்டிருப்பதுபோல் ஏதோ ஒரு திரைப்பட ஸ்டில் பிரேம் போட்டு மாட்டப் பட்டிருந்தது. முத்துக்குமரனின் பார்வை அடிக்கடி அந்தப் படத்தின் மேலேயே செல்வதைக் கண்டு மாதவிக் குத் தர்மசங்கடமாக இருந்தது. அவன் மனத்தில் அநா வசியமாக ஏதேனும் சந்தேகம் எழக்கூடாது என்று விளக் கக் கருதியவளாக, மணப்பெண் என்ற சமூகப் படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நான் உபபாத்திரத் தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/79&oldid=560873" இலிருந்து மீள்விக்கப்பட்டது