பக்கம்:சமுதாய வீதி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 85

என்றெல்லாம் முத்துக்குமரனின் மனத்தில் சிந்தனை கள் ஓடின. காலைச் சிற்றுண்டியை பையன் கொண்டு வரு வதற்குள் குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்துவிட லாம் என்று பாத் ருமுக்குள் நுழைந்தான் அவன். பல் துலக்கும் போதும், நீராடும் போதும், உடம்பைத் தேய்த் துக் கொள்ளும் போதும் நண்பனைப் புற்றிய அதே சிந்தனை தொடர்ந்தது.

"ஷவரை மூடிவிட்டுத் துடைத்துக்கொண்டு, பாத் ரூமை அடுத்த பகுதியில் உள்ளே இருந்த டிரெஸ்ளிங் டேபிளுக்கு முன் அவன் வந்தபோது அறைக்கு வெளியில் மேஜையில் டைப் அடிக்கும் ஒலியும், வளைகள் குலுங் கும் நாதமும் கேட்டன. மாதவி வந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டான். தனக்குக் காத்திராமலும், தன்னை எதிர் பார்க்காமலும் வந்தவுடனே அவளாக டைப் செய்யத் தொடங்கியது என்னவோ விட்டுத் தெரி வது போல் தோன்றியது அவனுக்கு.

உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் மாதவி அமைதியாக இருந்ததைக் கண்டான். தான் வெளியே வந்ததும் அவள் டைப் செய்வதை நிறுத்திவிட்டுத் தன்னி டம் பேசாமல்-தொடர்ந்து அமைதியாக டைப் செய்து கொண்டே இருந்ததைக் கண்டதும் நிலைமையை அவ னால் உய்த்துணர முடிந்தது. கோபால் அவளிடம் ஏதோ பேசியிருக்கக் கூடுமென்றும் அவனுக்குப் புரிந்தது. கோபால் பேசியிராத பட்சத்தில் திடீரென்று அவள் அவ் வளவு செயற்கையாக மாற வழியில்லை என்பதும் அவ னு க்குப் புரிந்தது. அருகே சென்று அவள் டைப் செய்து பேர்ட்டிருந்த தாள்களைக் கையிலெடுத்தான் முத்துக் குமரன். அப்போதும் அவள் அவனிடம் பேசவில்லை; தொடர்ந்து டைப் செய்து கொண்டிருந்தாள்.

"என்ன மாதவி! எதுவும் பேசக்கூடாதென்று கோபமா!

ギー6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/87&oldid=560882" இலிருந்து மீள்விக்கப்பட்டது