பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன வடிவங்களில், சேர்ப்பது நல்லது என்பதைக் குறித்து உங்களுடைய விருப்பங்களைத் தெரிவியுங்கள். - -

அதோடு கற்பனையழகு மிகுந்த, உண்மையின் உயிர்ப்புடன் கூடிய நல்ல கதைகள், கவிதைகள், ஓரங்க நாடகங்கள் முத லியன அனுப்புங்கள். எத்தனையோ எழுத்தாளர்கள் இருக் கிறீர்கள், எங்கெங்கோ இருக்கிறீர்கள். உங்களுக்கு சரஸ் வதி சந்திக்குமிடமாக இருக்கட்டும். கூட்டு முயற்சியில் பயன் எவ்வளவோ உண்டு.

கடைசியாக, 48 பக்கங்கள் கொண்ட பத்திரிகையை எப்படி 2 அணுவுக்குத் தருகிறீர்கள் என்று அனைவரும் கேட்கிறீர்கள். மாதா மாதம் பணத்தியாகம் செய்து தான்! பத்திரிகையின் விற்பனையை உயர்த்துவதில் ஒருவர் பாக்கியின்றி நீங்கள் அனைவரும் உதவினுல் நஷ்டத்தைத் தவிர்த்து, இன்னும் சிறப்பாக முன்னேற முடியும். ஏஜென்ஸிக்கு ஒவ்வொரு ஊரி லும் ஏற்பாடு செய்யுங்கள் என்று வேண்டுகிருேம்.

பத்திரிகைக்குச் சந்தாதாரர்களாக உடனே சேருங்கள். பிரதி கள் கிடைப்பதில் உத்திரவாதம் தேடிக் கொண்ட மாதிரி இருக் கும். அதோடு இலக்கியப் பணியில் பங்கு தாரர்களாகிய மாதிரியும் இருக்கும். சந்தாத் தொகை சரஸ்வதி’க்கு மூல தனம் போல்.

ஆண்டு நிறைவு நெருங்கும் முன்னர் சரஸ்வதி தமிழ் நாட்டில் அசைக்கொணுத ஸ்தானத்தை பெற்றுவிட வேண்டும்.

வணக்கம். - ஆசிரியர் இத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்கள் அனைவரும் மார்க்சியக் கண்ணுேட்டமும் கம்யூனிஸ்ட் கொள் கைகளும் கொண்ட முற்போக்கு இலக்கியவாதிகளேயாவர்.

கைவருந்தி உழைப்பவர் தெய்வம்; கவிஞர் தெய்வம், கடவு ளர் தெய்வம் என்ற பாரதியின் வரிகளே மூலவாக்கியமாக

다 வல்லிக் கண்ணன் / 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/63&oldid=561144" இலிருந்து மீள்விக்கப்பட்டது