406
★
șY
சர்வ சமயச் சிந்தனைகள் * பொறுமை
தீய சொற்களைப் பொறுத்துக்கொள். சினம் கொள்ப வரிடம் சினம் கொள்ளாதே. தீமை செய்பவர்க்குத் தீமை செய்யாதே.
சினத்தைப் பொறுமையாலும், தீமையை நன்மை யாலும், பொய்யை மெய்யாலும் வெல்க; பொறுமை யே பொன்றாமையை அளிப்பதாகும்.
-மகாபாரதம்
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.
பொறுத்தல் இறப்பின் என்றும், அதனை மறத்தல் அதனினும் நன்று. கறுத்தின்னா செய்தவக் கண்ணும், மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.
இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர்நான நன்னயம் செய்து விடல். - வள்ளுவர்
பிறர் செய்யும் தீமைகளை மனத்தில் பகைமையின்றிப் பொறுத்துக் கொள்பவனே பக்தி செலுத்தத் தக்க சான்றோன் ஆவான். பெள
மன்னிப்பு வேண்டுபவனுக்கு மன்னிப்புத் தருக, தராத வன் தவறு செய்பவன். பெள
தன்னை யொருவன் இகழ்ந்துரைப்பின் தான்வனைப் பின்னை யுரையாப் பெருமையோன் - முன்னை வினைப் பயனால் ஆயிற்றால் என்ற தன்கண்
மெய்ம்மை நினைத்தொழிய நெஞ்சினோய் இல்.
ச - அறநெறிச்சாரம்