புலவர் த. கோவேந்தன் 25
女
இருளே உலகத்து இயற்கை, இருளறுக்கும் கைவிளக்கே கற்ற அறிவுடைமை, கைவிளக்கின்
நெய்யே தன் நெஞ்சத்து அருளுடைமை, நெய்பயந்த
பால்போல் ஒழுக்கத்தவரே பரிவிலா மேலுலகம் எய்து பவர். அறநெறிச்சாரம் ச
பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல், யாதும் அறங்கூற வேண்டா அவற்கு. நாலடியார் ச
நல்ல நம்பிக்கையின்றி நல்ல அறிவு உண்டாகாது; நல்ல அறிவின்றி நல்ல ஒழுக்கம் உண்டாகாது. GF
ஆசைகளை அகற்றினால் மட்டுமே அறநெறியில் நிற்க இயலும். & அறமும் உயிரும் - இரண்டையும் போற்றுவேன், ஆனால் இரண்டையும் பெற இயலாதாயின் உயிரைத் துறந்துவிட்டு அறத்தைக் காப்பேன். ö சகல பிராணிகளிடத்திலும் இரக்கம் கொள்ளுதல், சகல மனிதரிடத்திலும் அன்பு கொள்ளுதல், தன்னல எண் ணங்களுக்கு இடந் தராதிருத்தல், இவையே அறத்தின் இலக்கணம். &5
உனக்கு எதை விரும்பமாட்டாயோ அதைப் பிறர்க்கும்
விரும்பாதே. ᏭᏖ
உண்மையாக நடப்பதே அறநெறியின் உண்மையான இலட்சணம். &S
உலகத்தில் உள்ள வழிகள் இரண்டே, அன்பு கொள் வது, அன்பு செய்யாதிருப்பது, எல்லாம் இதில் அடங்கும். &S