புலவர் த. கோவேந்தன் t;3
அலகிலர விளையாட்டுடையார் எவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே. - கம்பர்
பொருளாகக் கண்ட பொருள் எவைக்கும்
முதற் பொருளாகிப் போதமாகித் தெருளாகிக் கருமும் அன்பர் மிடி தீரப்
பருகவந்த செழுந்தேனாகி அருளானோர்க்கு அகம்புறம் என்ற உன்னத
பூரண ஆனந்தமாகி இருள்தீர விளங்கு பொருள்யாது அந்தப் பொருளினையே இறைஞ்சி நிற்பாம்.
- தாயுமானவர்
- பூதபெளதிகங்க ளாய
புவனகோ சரங்கட்கெல்லாம் ஆதியாய் முதுமூலத்துக்கு
அநாதியாய் அகண்டா கார சோதியாய் விளங்கி நிற்கும் தூயசை தந்ய வாழ்வைக் காதலாய்ப் பரவி நாளும்
கருத்தினுள் இருத்தி வாழ்வாம்
- திருவினும் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த
மருவினும் மருவாய் அணுவினுக் கணுவாய்
மதித்திடாப் பேரொளி அனைத்தும்
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப்
பூதலத் துறைந்த பல்லுயிரின்
கருவினும் கருவாய்ப் பெருந்தவம் புரிந்த
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே. இ
- ஆண்டவனே, நீர் ஒருவரே, நீரே பற் பலவாய்த்
தோன்றுகிறீர். w