72
சர்வசமயச் சிந்தனைகள்
தேவலோகத்திலுள்ள உன் தந்தை சால்புடையவராக இருப்பது போலவே நீயும் சால்புடையவனாக ஆக வேண்டும். கி
சால்புடையவன் அருளுடையன், எந்த உயிர்க்கும் தீங்கு செய்யான், பொறையுடையன், உண்மையன், மாசற்ற மனத்தினன், எல்லோரையும் சமமாக எண்ணு பவன், எல்லோர்க்கும் உதவுபவன்.
-விஷ்ணு புராணம் சான்றோர் அறம் என்றும் இன்பம் என்றும் இரண்டு பொருள்கள் உள. சான்றோர் இன்பத்தை விட்டு அறத்தையே கொள்வர்.
அறிவில்லாதவர் ஐம்புல இன்பத்தை நாடுவர், நாடி மரணத்தின் வலையில் வீழ்வர். அறிஞர் நிலையற்ற வற்றை நிலையின என்று கருதார். -உபநிடதம்
அறிவில்லாதவர் பற்றுடன் தொழில் செய்வர் அறி வுடையவர் பற்றை நீக்கி மக்கள் நலம் நாடித் தொழில்
செய்வர். -பகவத்கீதை தான்் அடையும் நலன்களைப் பிறர்க்கும் தந்து துய்ப்ப வனே அறிஞன். பெள
வானத்திலும் உயர்ந்தோர் இருவர்; எல்லையற்ற ஆற்றல் இருந்தும் எந்தத் தீமை செய்யவும் பயன் படுத்தாதவ்னும், பொருளில்லா திருப்பினும் பிறர்க்குக் கொடுப்பவனும் ஆவர். -மகாபாரதம் கொல்லா நலத்தது நோன்மை, பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. திருவள்ளுவர்
சால்பிற்குக் கட்டளை யாதெனில், தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல். -வள்ளுவர்