இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புலவர் த. கோவேந்தன் 97
நன்றென் றிரு நடு நீங்காம லேநமக் கிட்டபடி என்றென் றிருமண மேயுனக் கேவுப தேசமிதே.
-பட்டினத்தார்
- அறிமின் அறநெறி, அஞ்சுமின் கூற்றம்,
பொறுமின் பிறர் கடுஞ்சொல, போற்றுமின் வஞ்சம், வெறுமின் வினைதீயார் கேண்மை, எஞ் ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.
ச -நாலடியார்
- இன்றுளார் இன்றேயு மாய்வர், உடையது உம்
அன்றே பிறருடைய தாயிருக்கும் - நின்ற கருமத்த தல்லாத கூற்றின்கீழ் வாழ்வார் தருமந் தலைநிற்றல் நன்று.
ச -அறநெறிச்சாரம்
- புன்னுணிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை - இன்னினியே நின்றான் இருந்தான்் கிடந்தான்் தன் கேளறச் சென்றான் எனப்படுத லான்.
ச நாலடியார்
- சென்றநாள் எல்லாம் சிறுவிரல வைத்தெண்ணலாம்
நின்றநாள் யார்க்கும் உணர்வரிது - நின்றொருவன் நன்மை புரியாது நாளுலப்ப விட்டிருக்கும் புன்மை பெரிது புறம். ச -அறநெறிச்சாரம்
ல் நெஞ்சே, உலக வாழ்வில் கண்ட உயர்ந்த உண் மையை உனக்கு உரைக்கின்றேன்; உண்மை யாகக் கடவுளுக்கு உகந்தவண்ணம் ஒழுகுவதே அறிவாகும்.
- உலகத்தில் இரண்டு சக்திகள் உள்ளன. அவையே நன்மை தீமை என்பன. அறிவுடையோர் தக்கதைத் தேர்ந்துகொள்க, நன்மையை நாடுக, தீமையை அணுகற்க. ஜா