23 சலோம்
முதல் வீரன் :
ஏன்? மற்றவர்களைப்போல அரசர்களுக்கும் ஒரு கழுத்துத்
தானே!
காப்படோசியன் :
அது அஞ்சத்தக்கதன்றோ?
சிரியா இளைஞன் :
இளவரசி எழுந்திருக்கிறாள். அவள் மேசையை விட்டு
நகருகிறாள். மிகவும் தொல்லை அடைந்தவள் போலத் தோன்று
கிறாளே! - ஆ இந்த வழியாகத்தான் வருகிறாள், நமது பக்கமாகத்
தான் வருகிறாள். எவ்வளவு மெலிந்து இருக்கிறாள்!
மன்னியின் பணியாள் : -
அவளைப் பார்க்காதே. உன்னை வேண்டுகிறேன்,
அவளைப் பார்க்காதே.
சிரியா இளைஞன் :
வழி தவறிப்போன புறாவைப் போலிருக்கிறாள் அவள். காற்றிலே நடுங்கும் அல்லி மலரைப் போலிருக்கிறாள் அவள்..... வெள்ளிமலரைப் போலிருக்கிறாள் அவள்.
(சலோம் நுழைகிறாள்)
சலோம் :
நான் இங்கிருக்க மாட்டேன், இருக்கவும் முடியாது.
அரசன் பொழுதெல்லாம் என்னையே ஏன் பார்க்கிறான்? என்
அன்னையின் கணவனே என்னை இப்படிப் பார்ப்பது வியப்
புதான். இதற்கு என்ன பொருள் என்று எனக்குத் தெரியவில்லை.
சிரியா வாலிபன் :
இளவரசி, விருந்திலிருந்து இப்பொழுதுதான் வந்தீர்களா?