இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
27 சலோம்
அடிமை :
மன்னருக்கு. என்ன விடை சொல்லுவது, இளவரசி ?
சோகனான் :
ஒ, பாலத்தீனமே! உன்னை அடித்தவனுடைய தடி ஒடிந்த தற்காகக் களி கொள்ள வேண்டாம். பாம்பின் வயிற்றிலிருந்து கரு நாகம் பிறக்கும். அது பறவைகளை எல்லாம் விழுங்கிவிடும்.
சலோம் :
என்ன வியத்தகு குரல் அவனுடன் பேசுகிறேன்.
முதல் காவலன் :
இளவரசி, அது நடக்கிற காரியம் அன்று. அவனுடன் யாரும் பேசுவதை மன்னர் விரும்பவில்லை. முதன்மைக் குருகூட அவனோடு பேசக்கூடாதென்று மன்னர் ஆணையிட்டிருக்கிறார்.
சலோம் :
நான் அவனுடன் பேச விரும்புகிறேன்.
முதல் வீரன் :
அது இயலாத செயல், இளவரசி.
சலோம் :
அவனுடன் பேசுவேன். சிரியா இளைஞன் :
விருந்திற்குப் போவது நல்லது அன்றோ? சலோம் :
இந்த முற்றுணர்ந்தோனை அழைத்து வாருங்கள். (அடிமை போகிறான்) .
முதல் வீரன் :
எங்களுக்குத் துணிவு இல்லை, இளவரசி.