இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
49 சலோம்
மன்னன் :
அப்படியானால், வேறு யாரைப்பற்றி?
முதல் நாசரீன் :
நிலவுலகில் தோன்றிய தெய்வ குமாரனைப்பற்றி.
ஒரு யூதன் :
தெய்வகுமாரன் இன்னும் தோன்றவில்லை.
முதல் நாசரீன் :
அவன் தோன்றிவிட்டான், அவன் உலகம் எங்கும் அற்புதம் இயற்றி வருகிறான்.
மன்னி :
ஆ ஆ! அருள் விளையாடலா! எனக்கு அருள்விளையாடல்
நம்பிக்கை இல்லை. நான் எத்தனையோ புதுமைகளைப் பார்த்தி ருக்கிறேன்.
(ஏவலாளை நோக்கி) விசிறி கொண்டுவா.
முதல் நாசரீன் :
இந்த அறிவன் உண்மையாகவே புதுமை நிகழ்த்தி வரு கிறான். கலீலி நகரிலே நடந்த ஒரு திருமணத்திலே நீரை மதுவாக மாற்றினான். அங்கே போயிருந்தவர்கள் என்னிடம் சொன் னார்கள். தொட்ட நொடியிலே, இரு தொழுநோயாளிகளைக் குணப்படுத்தினான்.
இரண்டாம் நாசரீன் :
அவனால் குருடர்களுக்கும் பார்வை வந்தது. மலைகளிலே தேவதைகளுடன் பேசியிருக்கிறான்.
ஒரு சடுசியன் :
தேவதைகள் இல்லை.