இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
55 சலோம்
மன்னன் :
(சலோமைப் பார்த்துக்கொண்டே) திசெல்லினசு, நீ உரோமில் இருந்தபோது, கோவேந்தன் அது தொடர்பாக ஏதாவது சொன்னாரா?
மன்னி :
எது பற்றி வேந்தே?
மன்னன் :
எது பற்றியா? ஆ. மறந்துவிட்டேன், உன்னிடம் ஏதோ கேட்டேன் அன்றோ?
மன்னி :
நீங்கள் மீண்டும் என் மகளையே பார்க்கிறீர்கள். அவளைப் பார்க்கக்கூடாது. முன்னாலேயே சொல்லி இருக்கிறேன் அல்லவா?
மன்னன் :
நீ அதையே சொல்லுகிறாயேயொழிய வேறு ஒன்றும் சொல்லமாட்டேன் என்கிறாயே!
மன்னி :
நான் மீண்டும் அதையே சொல்லுகிறேன்: என் மகளைப் பார்க்காதீர்கள், வாருங்கள், உள்ளே போவோம்.
மன்னன் :
சலோம், கொஞ்சநேரம் நடனம் ஆடேன்!
மன்னி :
முடியாது, அவளை நடனமாட விடமாட்டேன்.
சலோம் :
அரசே, நடனமாட எனக்கு விருப்பம் இல்லை.