இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருக்குறள் பரப்புவதையே தங்கள் வாழ்க்கை நோக்கமாகக் கொண்ட, திருக்குறள் கற்ற அறிஞர்கள் ஒரிருவர் அண்மையில் ஆங்காங்கே நடைபெற்றுவரும் சாதி மாநாடுகளில் கலந்து கொள்வது பற்றி அறிய மிகவும் வருந்துகிறோம். புறத்தே ஒருவருமாகவும் அகத்தே வேறு உணர்வினராகவும் உள்ள அவ்வறிஞர்கள் தங்களை அச்சாதிச் சகதியினின்று மீட்டெடுத்துக் கொள்ளவில்லையானால் அவர்களைப் பற்றிய கண்டனக் கட்டுரைகள் தென்மொழியில் வரும் என எச்சரிக்கின்றோம்! அவர்களின் சாதி வெறி ஒழிக!
தென்மொழி: சுவடி-17, ஒலை-11, (1981)
57