பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

சான்றோர் தமிழ்

மெத்த இழிவென்றும் மிகுபெரும்
பாலாரை யெல்லாம்
கத்திமுனை காட்டிக்
காலமெல்லாம் ஏய்த்துவரும்
பாவிகளைத் திருத்தப்
பாவலனே நம்மிருவர்
ஆவிகளை யேனும்
அர்ப்பணம் செய்வோம்”

“அரசென ஒருசாதி-அதற்கு
அயலென வேறொரு சாதியுண்டோ?”

என்றும்,

“--------------------- அநீதிசெய்த
நவையுடைய மன்னனுக்கு நாட்டுமக்கள்
கற்பாடம் கற்பியா திருப்பதில்லை”

என்றும்,

“............ அவரெல்லாம் இந்தநேரம்
எலியாக முயலாக இருக்கின்றார்கள்!
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்
புலிவேடம் போடுகின்றான்! பொதுமக் கட்குப்
புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?”

என்றும்,

“ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால், இத்தேசம் ஒழிதல் நன்றாம்”

என்றும் வரூஉம் புரட்சிக் கருத்துகள் நெஞ்சிலே என்றும் நிலையாகக் கொள்ளத் தக்கவைகளாம்,