பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

சான்றோர் தமிழ்

தம் மனைவியார் வள்ளியம்மை குறித்து இவர்

குறிப்பிடும் பகுதி வருமாறு :

“மகராசி என்னும் வள்ளி யம்மையை
நன்மனை அறங்களை நன்கு வளர்த்திட
முன்மனை யாக மொய்ம்பொடு கொண்டேன்
.........................................................................
எனதொரு வடிவும் எனக்குறு தொண்டுமே
கனவிலும் நனவிலும் கண்டவள் நின்றவள்
என்னைப் பெற்றோர், என்னொடு பிறந்தோர்
என்னை நட்டோர் யாவரும் தன்னுடை
உயிரெனக் கருதி ஊழியம் புரிந்த
செயிரிலா மனத்தள்; தெய்வமே அனையள்.”

இப்பாடல் வழி வ.உ.சி.யின் தெள்ளுதமிழ் அகவல் நடையின் அழகினையும் மாண்பினையும் உணரலாம்.


3. உரையாசிரியப் பணி

நாளும் தமிழ்ப் பணியில் கருத்தூன்றிய சிதம்பரனார் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் சிவஞான போதத்திலும், கைவல்ய நவநீதத்திலும் பெரிதும் ஈடுபட்டார். சிவஞான போதத்திற்கு ஓர் உரை கண்டு வெளியிட்டார். சித்தாந்தப் புலமையும் வேதாந்த வித்தகமும் விளங்க அவர் கண்ட உரை, நயம் பயப்பதாகும். உரைப்பாயிரத்தின் இறுதியில்,

“இறைவனையும் உயிரையும் பற்றிப் பேசும்
இவ்வருமையான நூலைத் தமிழ் மக்களெல்லாம்
படித்தல் வேண்டும். படிக்க முன்வர வேண்டும்
என்ற ஒரே நோக்கத்துடன் நான் இவ்வுரையை
இயற்றியுள்ளேன். எனது நோக்கம் இனிது
நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் துணை.”