பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார்

31

என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் ‘விவேகபாநு,’ எனும் தமிழ் இதழின் ஆசிரியராக இருந்து பணியாற்றிப் பல்வேறு பயனுறு கட்டுரைகளை அதில் எழுதியுள்ளார் என்பது ஈண்டு நெஞ்சில் நிறுத்தத் தக்கதாகும்.

4. படிப்புப் பணி

பழந்தமிழ் நூற் பதிப்புப் பணியில் தமிழில் முதலில் ஈடுபட்டவர் இச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்ற யாழ்பாணத்தைச் சேர்ந்த சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் ஆவர். சங்க நூல் முதற்பதிப்பாசிரியர் என்று போற்றப் பெறுபவர் அவராவர். வ.உ.சி. தமிழ் இலக்கிய இலக்கணத்தை அடிநாள் தொட்டே நன்கு கற்றவர். சங்க நூற்றேர்ச்சி மிக்கவர். தொல்காப்பியத்தை நல்லாசிரியரிடம் தம் வாழ்நாள் எல்லாம் பாடங்கேட்டவர். பேராசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார், ச. சோமசுந்தர பாரதியார், எஸ். வையாபுரிப்பிள்ளை, சி. சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் முதலியவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்.

வ.உ.சி. அவர்களுக்குத் தொல்காப்பியம், திருக்குறள், சிவஞான போதம், ஆலன் நூல்கள் முதலியவற்றில் நிரம்ப ஈடுபாடு உண்டு. தொல்காப்பியத்தை 1910ஆம் ஆண்டு சிறையில் படிக்கத் தொடங்கினார். வ.உ.சி. கூறுவன வருமாறு :

“அதன் பொருளதிகாரத்தை யான் படித்தபோது அதில் வேறு எம்மொழி இலக்கணத்திலும் காணப்படாத நிலப்பாகுபாடு, நிலங்களின் மக்கள் ஏனைய உயிர்கள், மரங்கள், செடிகள், மாக்கள்.