பக்கம்:சாமியாடிகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

சு. சமுத்திரம்

224 சு. சமுத்திரம்

வேட்டி அளவிலான வெள்ளைப் படுதா தெரிந்தது." "பெரியோர்களே. தாய்மார்களே. எல்லாம் வல்ல சுடலை மாடன் திருவிளையாடலை முன்னிட்டு லைலாவும் அவள் காதலர்களும் என்ற படம் காண்பிக்கப்படும்" என்று ஒரு முழக்கம் கேட்டது. இதனால், காளியாத்தா கோயிலில் கூடிய கூட்டத்தில், பாதிக்கு மேலானோர் சொக்கார, சொந்தக்கார பேதங்களைத் தாண்டி, லைலாவைப் பார்ப்பதற்காக, விழுந்தடித்து ஓடினார்கள். உடனே, கரும்பட்டையான் நாட்டு வக்கீல் நாராயணன், வயதான வில்லுப்பாட்டாளியைத் தெரியாத்தனமாக மல்லாக்கத் தள்ளிவிட்டு, "அண்ணன்மாரே, தம்பிமாரே. அக்காமாரே, தங்கைமாரே" என்று மாரடிப்பது போல் கூவிவிட்டு, சினிமாப்புகழ் சிவராமன், நடிகர்கள் போலவும், நமது தலைவர்கள் போலவும் நடித்துக் காண்பிப்பார் என்றான்.

ஆனாலும், லைலாவுக்கே மவுசு. புறநானூற்று வீரர்களாய் வீராங்கனைகளாய்ப் புறப்பட்ட கூட்டம், முன் வைத்த காலைப் பின் வைக்கவில்லை. குறிப்பிடத்தக்க எல்லாக் கரும்பட்டையான்களும், முனங்கிக் கொண்டிருந்த போது, பாவம் இந்தக் காளியம்மன் சாமியாடி தாத்தா, நைட்டி மாதிரியான சிவப்பு கவுனைத் தோள் வழியாகக் கால்வரைக்கும் தொங்கப் போட்டுக் கொண்டு, இரண்டு கரங்களிலும் ரப்பர் வளையல்களை மாட்டிக் கொண்டு முட்கம்பி செருப்பைச் செருகிக் கொண்டு, நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் மீதிக்கூட்டத்தில் பாதிக் கூட்டத்தை துரத்தினார். திருமலையால் பொறுக்க முடியவில்லை.

"இன்னைக்கு நீரு. ஆடுறதோட சரி. நாளைக்கு ஒம்ம பேரன்தான் ஆடுவான். சாவப் போற காலத்துல, ஒமக்கெல்லாம் எதுக்குய்யா. சாமியாட்டம். வாலிபனுக்கு வழிவிடும்."

நாட்டு வக்கீல், குள்ளக் கத்தரிக்காய், பீடி ஏசெண்ட் வகையறாக்களுக்கு மத்தியில், ஒரு நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்திருந்த பழனிச்சாமி திருமலையைக் கைகாட்டி அமர்த்தினார். தொண்டையைக் கனைத்தார். அவர் ஏதோ பேசப் போகிறார் என்று கைப் பையன் விகடத்துக்காக ஆயத்தம் செய்த சினிமாப் புகழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/226&oldid=1243781" இலிருந்து மீள்விக்கப்பட்டது