சாமியாடிகள்
251
சாமியாடிகள் 251
வெட்டாட்டா நான் பழனிச்சாமி மகன் இல்ல. இது எனக்குப் பெரிசில்லடா. என் தங்கச்சிய இழுத்துட்டுப் போனியே. அதுக்கு நீ ரத்தத்தால பதில் சொல்லித்தான் ஆகணும். ஏய். அலங்காரி செறுக்கி."
சப்-இன்ஸ்பெக்டர் ஓடிவந்து அவன் விலாவில் குத்தினார். பிடறித் தலையைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டே, அவன் முன் தலையை சுவரிலே மோதவிட்டார். அவருக்கு அடித்த களைப்பு ஏற்பட்டு விடக்கூடாதே என்று இரண்டு காவலர்கள் ஒத்தாசைக்கு வந்தார்கள். திருமலையைக் கவனிக்கும்படி அவர்களுக்கு கண்காட்டிவிட்டு சப்-இன்ஸ்பெக்டர் வெளியே வந்து, துளசிங்கக் கூட்டத்தின் மையம் போல் நடுவில் வந்து நின்றார்.
"இந்தாம்மா. புஷ்பம். வேன்ல ஏறு. மருத்துவ பரிசோதனை செய்துட்டு வர்லாம்."
"ஸ்ார். கோபப்படாம கேட்கணும். எங்க சித்தி புத்தியில்லாதவள். தெரியாத்தனமாக சொல்லிட்டாள். அவன் ஒண்ணும் என் சிஸ்டர கற்பழிக்கல ஸார்."
"கம்மா கிட துளசிங்கம். கற்பழிக்க முயற்சி செய்தால் அதுவும் குற்றந்தான்."
சப்-இன்ஸ்பெக்டர் தன் தவறை உணர்ந்தவர்போல் வாயில் இருந்த சிகரெட்டை வீசிவிட்டு எச்சரித்தார்.
"பால்ஸ் கம்ளெயிண்ட் கொடுத்ததுக்கு ஒங்களயும் இப்போ உள்ளே போடலாம் தெரியுமா?"
"தெரியாம இருப்பனா ஸார். இவனையும் விடப்படாது. என் தங்கச்சி. பேரும் சந்திக்கு வரப்படாது. ஏதாவது வழி சொல்லுங்க
- >
6tus[[T...
சினிமா மாஸ்டர் குறுக்கே புகுந்தான்.
"இந்தாப்பா துளசிங்கம். ஸார் மச்சினிக்கு வளைகாப்பாம். வீடியோ எடுக்கணுமாம். ஒங்கிட்டே தானே டேப் இருக்கு கொடு