பக்கம்:சாமியாடிகள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

259

தலைமையில் காவலர் வேன்களும், சினிமா வேனும் மீண்டும் ஓடின. அப்படி ஒடி, செம்பட்டையான் சாமியாடி கூட்டத்தின் முன்னால் போய் நின்றது. அங்கே ஏழெட்டு போலீஸ்காரர்கள் இறங்கி சாமியாடிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதுபோல் மேளத்திற்கு முன்னாலும் கூட்டத்திற்கு பின்னாலும் பக்கவாட்டிலும் போய் கூட்டத்தோடு கலக்காமல், சிறிது இடைவெளிவிட்டு நடந்தார்கள். ஒரு போலீஸ்காரர், தனித்துவத்தைக் காட்டி தனியாக ஆடிய சாமியாடி ரத்தினத்தை சண்டை போட வந்த சதிகாரனாய் நினைத்து காலில் ஒரு போடு போட்டார்.

போலீஸ் பயத்தில் ஓடப்போன மேளக்காரர்களை இரும்புக்கரம் தடுத்து நிறுத்தின. வாசிக்கப் பயந்து நின்ற நாதஸ்வரக்காரர்களின் வாய்களில் நாதஸ்வர முனைகள் திணிக்கப்பட்டன. தாறுமாறாக ஆடிய சாமியாடிகள் வரிசைப்படுத்தப்பட்டு லெப்ட் ரைட் போல் ஆடும்படி சொல்லப்பட்டனர்.

மீண்டும் போலீஸ் வண்டிகள் சினிமா வேனின் சிநேகிதத்துடன் ஒடியது. பள்ளிக்கூட மைதானம், ஊர்க்கிணறு, குழாயடிகள், காளியம்மன் கோவில், பழனிச்சாமி வீட்டின் பாதை, சுடலைமாடன் கோவில் முதலிய பல இடங்களில் லத்திக் கம்புக்காரர்கள் குதித்துக் குதித்து இறங்கினார்கள். ஆங்காங்கே மண்வெட்டிகளை வைத்துக் கொண்டு வயல் வரப்புகளுக்குப் போகப் போனவர்களைக் கூட ஆயுதத்தை எடுத்துக்கிட்டா நிற்கீங்க என்று அதட்டினார்கள். போலிஸ் என்றால் பயம் வரவேண்டும் என்ற தத்துவார்த்த நோக்கத்துடன் வழியில் சிக்கியவர்களை அடித்தார்கள். வயதானவர் களை அதட்டினார்கள். வழக்கம்போல் தேநீர் கடைகளில் உட்கார்ந்தவர்களை அதட்டி அப்புறப் படுத்தினார்கள். அந்த இடங்களில் உட்கார்ந்து கொண்டார்கள். கிணறுகளில் தண்ணீர் எடுத்த பெண்கள் பாதிக் குடங்களோடு ஓடினார்கள்.

அரை மணி நேரத்திற்குள் எதிர்பாராதது நடந்து விட்டது. ஊரே போலிஸ்மயமாகிவிட்டது. அந்த ஊருக்கு முன்பும் போலிஸ் வந்திருக்கிறது. மாமூலாக வந்து மாமூலாகப் போயிருக்கிறது. ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/261&oldid=1244096" இலிருந்து மீள்விக்கப்பட்டது