பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

31


செலவு? என்று வெளியே நெட்டித்தள்ளுகின்றார்கள். அல்லது என் நடவடிக்கைகள் கொஞ்ச நாள் முடங்கிக் கிடக்கட்டுமே என்ற ஏற்பாடாயிருக்கலாம். அல்லது, என்னைச் சிறையில் தள்ளியதன் மூலம், என்னைப் பின்பற்றுபவர்களுக்கு, அல்லது எதிலும் நேரடியாகப் பங்குகொள்ள முடியாமலிருக்கும் சுதந்திரப் பிரியர்களுக்கு, இது ஓர் அபாய எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்ற முன்னேற்பாடாக இருக்கலாம் அல்லது அாசாங்கத்துக்கு அதிக வரியைச் செலுத்தி, அதைத் தன் காலடியிலே கிடக்கும் பந்து போல் விளையாடும் பணக்காரர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு கண்துடைப்பாக இருக்கலாம். அல்லது எனக்கே கூட நான் இனிமேல் இப்படிச் செய்யாமலிருப்பதற்குக் காட்டும் பயத்தின் படிப்பினையாக இருக்கலாம். எது எப்படியிருந்தாலும் எனக்கு இன்று விடுதலை. நான் மட்டும் விடுதலையடைந்து பயனில்லை என் தாயகமாம் இத்தாலிய நாடே விடுதலையடைந்து தீரவேண்டும். அதற்காக நான் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கையில், நான் இந்த உலகத்திலேயே இருந்து விடுதலையானாலும் கவலைப்படப் போவதில்லை. இந்தச் சிறைச்சாலையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கட்டும். என் இஷ்டமான போது உள்ளே வருகின்றேன். சர்க்கார் விரும்பும் போது வெளியே அனுப்பட்டும். “மகிழ்ச்சி” என்று மடமட வென வெளியே நடந்தான் மாஜினி.