இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாவின் முத்தம்
11
கவிதை பிரித்து, கலையின் உச்சியில்,
தேனார வார்த்துச் சில்லிட்டு ஒடும்
கானாறு போலக் களிப்பில் நழுவி,
அழகை அரித்து அள்ளும் கார்த்திகை
மாதத் தின் மேல் மணிவளைக் கரத்தைப்
புழங்கினாள். விளக்குப் புதுநாள் தொட்டதே!
பயில்கின்ற தூக்கம் உன்னைப்
படைத்ததோ முகிலே? நீ தான்
வெயிலற்ற சிரிப்போ? நோயோ
குள்ளத்தின் அடைப்போ? சாவோ?
துயரங்கள் அனுப்பிவைத்த
ஒலையோ? கும்பிக் காடோ?
உயர மல்லாத நெஞ்சின்
தாக்கலோ? மதத்தின் ஏடோ?
காக்கையின் கழுத்து வண்ணக்
கருக்கலின் புருவமே! செந்
திக்குளிப் பாட்டு கின்ற
பரிதிக்கு, இதழ்கள் விற்று,
தேக்குகின் றாய்உ டம்பில்
செந்நிறப் புரட்சி! இன்று