பக்கம்:சாவின் முத்தம்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

37


வெளிச்சம் வேண்ரும். வீட்டின் உள்ளே
‘சரசர’ வென்று வந்த ஓசையை
மின்போல் எழுந்து என்ன என்று
பார்க்க வேண்டாமா? பச்சைக் குழந்தை
என்ன ஆனதோ? எழுங்கள் எழுங்கள்”
என்றாள் மனைவி.
-ஒய்யாரம் குறித்து,

“ஒன்று மில்லை! உன்மன் திப்படி
அச்சத் தாலே அதிரலாம் கண்ணே!
சற்று முன்னே,சுண்டெலி ஒன்று
என்மேல் தாவி எழுந்தது! வீட்டின்
உள்ளே வந்து சள்ளை வைத்து
இருக்கலாம்! இந்த வருத்துங் குளிரில்
தனியாய்ப் படுத்தல் தகுமா கரும்பே?
ஊர் உறைந்து ஒடுங்கிக் கிடக்கும்
இந்த வேளைதான் இனிப்புக் குரியது!”
என்றான்.

- அந்த இளந் தமிழச்சி

பேச்செடுக் காமல்; பின்நடப் பவைகளைத்
தன்பொறுப் பாக்க, களைந்த அமைதி
அழகு பிரிக்க, அரும்பாய்ச் சிரித்து;
தாண்டாத வில்விழிச் செங்கண் பாண்டியன்
தாழைமோத் தைத் தோளில் பூத்து;
வெட்சிப்பூ மேலே விளையாடும் அலரிபோல்
வரவுபார்த் திருக்கும் திருவாள் இதயத்துக்
குளிர்ந்த உதட்டில் மணிவாய் பாய்ச்சி
"சஞ்சரிக்கும் இன்பச் சரக்கே!” என்று
வாரினாள் அவனை வாழ்த்தி!