பக்கம்:சாவின் முத்தம்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

சாவின் முத்தம்



பசலே வானத்து நிசியில் வடிந்த
கண்பனி எடுத்துக் களிப்பில் வைத்துச்
" சீதப் புனலின் சுளேயோ " என்று
சந்தனச் சுவடிக் கன்னத்தை இதழ்கள்
உழுதிட, சித்திரப் பழச்சாற்றுப் பரப்பில்
ஊன்றினான் இன்பம் விளைந்தாள்! இருமுகம்
இரண்டு நிலவு ஈரைந்து பூக்கள்!
பாகு பொதிந்த பவளவாய்க் கிழிசல்
மணிநீர் அள்ளும் தாமரைக்காடு!
மைதான விழிகள் மலர்ந்தன விழுதுக்
கையில் மெய்யேறக் கலந்தனர் கொஞ்சம்
வையத் தொடங்கிற்று மனப்பேச்சு குடும்பம்
செய்து கொண்டன திருவிழா 'இச்சுகள்!"


பூத்து,அமையாத பூவொன்று சொல்லி
சாத்துவான் வாயை கங்கை சிரித்து
'நல்ல தமிழன் இசைக்கும் பாடல்
வெல்லம்! இதழின் மணிச்சுளை!' என்பாள்.
தேன்வரை கின்ற சிங்கார உலகின்
அசையா நெஞ்சம் அமுதின் தேக்கம்!
சுருண்ட நினைவுகள் மதத்தின் பிரசவம்!
இல்லையா கண்ணே!” என்பான். ஒப்புவாள்.
செவ்வை கொடுக்கும் சங்கக் கவிைதை
ஒவ்வொரு கத்தாய் விழுந்தது -
திரும்படி” என்று சிரிப்பான். குங்குமக்
கரும்பின் தெளிவே வாழ்க என்று
வாழ்த்து நகர்த்தி மகிழும் பூங்கோதையின்
பலாப் பழத் திமுகப் படையலின் குவிரிதழ்
வதங்கலில் லாத வாதாம் பழங்கள்.