இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
சாவின் முத்தம்
உடை பொருத்தி விட்டவளும்
நானே! இன்று
உள்ளத்தால் ஏன் சோகம்
தெளிக்க வேண்டும்?
விடை பெற்று வளர்கின்ற
கொடிகள், கொம்பின்
மேனிருசி பார்க்காமல்
போமோ!' என்று
பிசைந்திட்டாள் எண்ணத்தை
பின்னும் "துன்பம்'
பதம் பார்க்க ஓடிவரும்
அதிர்வாள்! பச்சை
அசைவினிலே கொடிமுல்லை
ஆகி, சற்று
ஆடுவாள்; ஆனந்தம்
வைப்பாள்! மச்சான்
இசை உலகம் வார்த்தெடுத்து
மணி நிலாவில்
”இந்தாடி தென் குயிலே!”
என உடம்பின்
திசைஎங்கும் பாய்ச்சிடுவான்.
அதற்குள் எந்தன்
சிறு நெஞ்சம் ஏன்
கூத்து ஆடவேண்டும்?
எனக் கேட்டாள் தன் மனத்தை.
பறந்தாள் வீடு.
}}