பக்கம்:சாவி-85.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 வணங்கும் போது அபிவாதயே சொல்லத் தேவையில்லை யென்றாலும் என்னை நான் முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தவறியதைச் சுட்டிக் காட்டவே அந்த மாதிரி இழுத்தடித்துச் சோதித்தார் என்ற முடிவுக்குத்தான் என்னால் வர முடிந்தது. ' அதே மகாபெரியவர் பின்னாளில் சாவியிடம் அன்பு காட்டியதும், வேத வித்து கதை எழுத ஆசி வழங்கியதையும், குங்குமம் பத்திரிகை தொடங்கிய போது கை நிறையக் குங்குமப் பிரசாதத்தை வாரி வழங்கி அரக்கோணம் பரசுராமன் மீனாட்சி தம்பதியர் மூலம் அனுப்பி வைத்ததையும் பற்றி சாவி சொல்லும் போது அவர் ஆனந்தக் கண்ணிர் பெருக்குவதைக் கண்டிருக்கிறேன். 138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/148&oldid=824441" இலிருந்து மீள்விக்கப்பட்டது