இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ராணிமைந்தன் போட்டிருக்காங்களே, மரங்களை அழிச்சுட்டு அந்த இடத்திலே என்ன செய்வாங்க?' என்று கேட்டார் சாவி, "என்ன செய்வாங்க, உருளைக்கிழங்கு போட்டு லாபம் சம்பாதிப்பாங்க. மரத்தை வெட்டக் கூடாதுன்னு சட்டம் இருக்கு. அதிகாரிகளைக் கூப்பிட்டு ஒரு நாளைக்கு விருந்து சாப்பாடு போட்டா மரத்தை வெட்டிக்கோங்கறாங்க" என்றாராம் காமராஜர். அப்படிச் சொன்னபோது கோபமும் விரக்தியும் அவர் முகத்தில் சிரிப்பாக வெடித்த அந்தக் காட்சியைப் பற்றி சாவி உணர்ச்சிபூர்வமாகச் சொல்லி வியப்பதுண்டு. 161