பக்கம்:சாவி-85.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கொண்டிருப்பதை உணர்கிறேன். திடீரென அந்த அறை, நான் டாக்டர்கள், நர்ஸ்கள், உபகரணங்கள், கூரை விளக்குகள், சுவர்கள் எல்லாம் கிறுகிறுவெனச் சுற்றி ஒரு வட்ட மேகத் துண்டாக மாறி மேலே மேலே போகிறோம். ஐயோ, நான் செத்துப் போய் விட்டேன். மேலே போய்க் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வுதான் என்னுள் அப்போது சுத்தமாக இருந்தது. மனைவியும் மக்களும் காத்துக் கொண்டிருக் கிறார்களே, அவர்களுக்கு இந்தச் செய்தியை இன்னும் யாரும் போய்ச் சொல்லவில்லையே என்று கவலைப்படுகிறேன். அப்படிக் கவலைப்படும்போதே அந்த நினைப்பும் போய் விடுகிறது. அடுத்த விநாடி (ஆபரேஷன் நடைபெற்ற ஐந்தரை மணி நேரம் எப்படிப் போயிற்று?) மார்பில் யாரோ எதையோ தைப்பதை உணர்கிறேன். லேசாக - மிக மிக லேசாக - வலிக்கிறது. 'ஒ... நான் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறேன் என்று தெரிகிறபோது அந்த மகிழ்ச்சியில் மார்பில் போடும் தையல் வலி பெரிதாகத் தெரியவில்லை. அதற்குப் பிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. மறுநாள் மயக்கம் தெளிந்து கண் திறந்து பார்த்தபோது என் உடம்பின் பல்வேறு பகுதிகளில் டியூப்கள் பொருத்தப்பட்டு விதவிதமான திரவ பாட்டில்கள், கருவிகளோடு இணைக்கப் பட்டிருந்தன. என் மீது ஒரு மருத்துவ அவரைப் பந்தலே படர விட்டிருந்தார்கள். இரண்டு நாட்களுக்குப் பின் ஐ.எலியிலிருந்து மீண்டும் என் அறைக்குக் கொண்டு போகப்படுகிறேன். அங்கே என் இரண்டு கால்களிலும் ஏதோ வலி இருப்பதை உணர்கிறேன். 342

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/368&oldid=824846" இலிருந்து மீள்விக்கப்பட்டது