XVI
இத்தொகுப்பிலுள்ள முழுக்கதைகளையும் விலாவாரியாகப் பேச முடியவில்லை. முன்னுரைக்கான பக்கக் கட்டுப்பாடு கருதி, சுருக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்துவிட்டது.
தோழர். சமுத்திரம் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகளில், இத்தொகுப்பு, வளர்ச்சியும், முதிர்ச்சியும் கொண்டு விளங்குகிறது. மேலும் பல தொகுப்புகளைத் தமிழுக்கும், உலகத் தொகுப்புக்கும் வழங்க வாசகர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
இறுதியாக சோசலிச யதார்த்தவாத இலக்கியத்தின் தந்தையான மார்க்சிம் கார்க்கி அவர்களின் முத்திரை வாக்கியத்தோடு முடிக்க விரும்புகிறேன்.
“ஒரு படைப்பை விட படைப்பாளி மேலானவனாக இருக்கவேண்டும்.”
இன்றைய சமுத்திரம், எனக்கு அப்படித்தான் புலப்படுகிறார். இலக்கியப்படைப் பின் நீண்ட நெடும்பயணத்தில், கடைசிவரை இக்கோட்பாட்டிற்கு விசுவாசத்தோடு நிற்பார்; நிற்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.
நாமக்கல்,
1-12–1999.
கு. சின்னப்பபாரதி.