பக்கம்:சிட்டுக் குருவி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருடன் ஒருவன் இரவிலே,
திருட எண்ணங் கொண்டனன்.
அருகில் உள்ள ஊரையே,
அடைந்து திருட எண்ணினன்.


வயலின் நடுவே வழியினில்,
மனிதன் நிற்கக் கண்டனன்.
பயந்து அங்கே நின்றனன்.
பதுங்கி மறைவில் ஒளிந்தனன்.


அந்த மனிதன் நடுவிலே,
அசைந்தி டாது நிற்கவே,
எந்த வழியில். செல்வது?
என்று எண்ணிப் பார்த்தனன்.

42