பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரக்கா. 53

அவர் மந்திரக்காரி வேதநாயகியல்ல. மேன்மை பொருந்திய எனது காதலர். நல்ல தையல்காரர்! - - - - -

உங்களை ஏமாற்றுவது தான் கடைசி முறையென்று சொல்லிவிட்டார். வருந்த வேண்டாம், என்னே முண்டை. யாக்கி, நீங்கள் சுக்மனுபவித்ததற்குப் பரிகாரமாக, நமது குடும்ப நகைகளே இனி நானே போட்டுக்கொள்வேன்.

மாந்திரிகத்தின் அடிப்படை, அதன் உண்மை சொரூபம் ஏமாற்றந்தான் என்பது சிலரது வாதம். அது பொய், மாங் திரிகர்களுக்கும், சோதிடர்களுக்கும், எப்பொழுதுமே லா. பழ்உண்டு. அனுபவத்தில் நீங்களும் கண்டு விட்டீஸ்கள்; எங்களைத் தேட முயற்சிக்க வேண்டாம். அது வீண் சிரமம். கடைசியாக என்ன வாழாமல் வாடி வைத்த உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

கங்கள், -

பார்வதி.

ரெட்டியார் திருதிருவென்று விழித்தார். அவர் முகத்திலே அசடு நிறைந்து வழிந்தது. ஆத்தி ாம், அவமானம், ஏமாற்றம், வெறுப்பு, துக்கம், எல்லாம் அங்கு, குதித்துக்கும்மாளமிட்டன. இவ்வ ளவுக்குமிடையே, சுயமரியாதைக்காரர் சிலரின் உரு வம் கண் முன்பு கோன்றிச் சிரித்தன. மனம் உடைந்தார். அவர்களே அழிக்கும் ஏற்பாடுகள் யா வும் சுக்குச்சுக்காக உடைந்து சிதறி மண்ணுேடு மண்ணுயின

செய்தி, புயல் வேகத்தில் எங்கும் பரவிற்று. தாங் காமல் துரங்கியகாளியூர் மக்கள் கண் விழித்தனர்.