பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழன் பாவம்! தான் அடிமைகளின் அடிமை; அடிமைகள் தளை நீங்கினால் தன் தளைமீதுள்ள கட்டுப் பாடு நீங்கித் தளை இரட்டிப்பாகும் என்பதை அவன் அறியான்!

உலக மக்கள், பிற நாட்டினர் அனைவர்க்கும் பொதுவான தளைகள் மட்டுமன்றி, தமிழனுக்கு சிறப்பான தளைகளையும் அகற்ற முனைந்த இயக்கங்கள் தமிழியக்கமும் சுயமரியாதை இயக்கமும் மட்டுமே. இவற்றின் தேசியம் தமிழன் உரிமைகளை விலக்கும் தேசியமன்று. இவற்றின் சமதர்மம் தமிழனடிமைத் தளையைக் காணமுடியாத சமதர்மமன்று. இவற்றின் பொதுவுடைமையை தமிழனும் மனிதன் என்பதை மறக்கும் பொதுவுடைமையன்று.

தேசியம். சமதர்மம், பொதுஉடைமை ஆகிய முத்திறையிலும் முனைந்து நின்று உழைத்த பெரியார் தோழர் சிங்காரவேலு. தமிழகத்துக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கே. உயகிற்கே உழைத்த சீரியர் அவர். ஆனால் அவரது இந்தியாவில் தமிழகம் அடங்கியிருந்தது . அவரதுஉலகில் தமிழகமும் இடம்பெற்றிருந்தது. அவரும் ஒரு தமிழன், இந்திய தேசியம், சமதர்மம், பொதுவுடைமை ஆகியவை; அவரும் ஒரு மனிதர் என்பதை மறந்த இவை போதாதா? இந்தியாவின் தமிழ் நாட்டின் பத்திரிகை உலகின் கண்களுக்கு அவர் தெரியாமல்போக வேறு என்ன வேண்டும்?

வருங்காலப் பகுத்தறிவுச் சமதர்ம உலகில் தமிழன் மதிக்கப்படாமல் போகான்—அவன் இறந்து பட்டாலன்றி அவனுக்கு இடம் கிடைத்தே தீரும். அப்போது, "யார் சிங்கார வேலு? எந்த நாடு அவரைப் 'பெற்றெடுத்தது? அவர் பேசும் பேறு பெற்ற மொழி