பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

சிந்தனைச் சுற்றுலா என்னும் இந்த நூல், ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுதப்பட்ட நூல் அல்ல.

 உண்மையிலேயே பல மாவட்டங்களுக்கும், 

மாநிலங்களுக்கும் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்பட்டபொழுது, நான் சென்ற இடங்களில் ஏற்பட்ட அனுபவங்களை நினைத்து நினைத்து எழுதி முடிக்கப் பெற்றதாகும்.

'ஏதோ எழுதினோம், பிறர் புத்தகம் போட்டார்கள். பணம் கிடைத்தது. அவர்கள் விற்பனை செய்தார்கள். பயன் பெற்றார்கள்!” என்ற நிலை என்னைப் பொறுத்த வரையில் இதுவரை ஏற்படவில்லை."

புதிய துறையான விளையாட்டுத்துறைக்கு புத்தகம் எழுதப் போய், பதிப்பிக்கின்ற பொறுப்பும், வெளியிடும் வேலையும், விற்பதற்காக அமைந்த வேதனைகள் எல்லாமே என்னை விடாமல் பற்றிக் கொண்டு விட்டன.

ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்காக, நானே எல்லாப் பொறுப்புக்களையும் சுமந்து கொண்டேன். அவற்றை சுமை என்று நினைக்கவில்லை. எனக்கு அவை சுகமாகவே அமைந்து விட்டன.

பல்வேறு சூழ்நிலைகளில், பல்வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களுடன் பயணம் செய்ய நேரிட்டது. பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. பிரச்சினைகளை பரிமாறிக் கொள்ளும் பக்குவம் எல்லாமே எனக்குக் கிடைத்தது.

வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் அதிகம் என்றாலும், என் உள்ளம் எடுத்துக் கொண்ட