பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேகமாக நடந்து செல்லுங்கள். உடல் வியர்க்க வேண்டும். ஏதாவது ஒன்றை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும் என்றார் டாக்டர்.' 'அதுபோதும். நடக்கிறேன். வேகமாக நடக்கிறேன், வியர்வை வரவேண்டும். அவ்வளவுதானே! இடைமறித் தார் வைத்தியநாதன். நாளை காலையிலிருந்து ஆரம்பித்து விடுகிறேன், எனது வீட்டைச் சுற்றி நடக்கிறேன். போதுமா? ம்ஹாம்! வீட்டைச் சுற்றி நடக்கும்போது திரும்பத் திரும்ப உங்கள் தொழில்துறை நினைவுகள்தான் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். அதனால் வேறு இடம் போங்கள். - - கடற்கரையில் நடக்கலாம் அல்லவா! வைத்திய நாதன் யோசனை கேட்டார். - உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் அங்கே வருவார்கள். அவர்களிடம் பேசினால் மீண்டும் மீண்டும் அதே பேச்சுக்கள், நினைவுகள்தானே வரும். பூங்கா, மைதானங்கள் எனது பல இடங்களையும் சொல் லிப் பார்த்தார் வைத்தியநாதன். டாக்டரோ எல்லாவற்றிற்கும் ஒரு மறுப்பு கூறிக்கொண்டே வந்தார். நீங்களே ஒரு இடம் சொல்லுங்கள் என்றார் சலிப்புடன். டாக்டரும் கனைத்துக் கொண்டே கூறினார். உங்கள் வீட்டிலிருந்து ஒரு பர்லாங் தூரத்திலுள்ள கல்லறைத் தோட்டம் ஒன்று இருக்கிறதல்லவா? அதை இரண்டு அல்லது மூன்று முறை சுற்றி வாருங்கள். உங்கள் உடலும் மனமும் நிச்சயம் தேறிவிடும் என்றார் டாக்டர். -