பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா தலைவரை பத்திரமாக மேடையிலிருந்து இறக்கிக் கொண்டு சென்ற பொழுது, அருகிலிருந்த அனுபவசாலி ஒருவர் கூறினார். நாய்கள் இனத்தில் மட்டுந்தானா இப்படி மனித இனத்திலும் தான். ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்கள். அந்தந்தத் துறையைச் சேர்ந்தவர்களை, நம்மை விட மோசமாகத் திட்டிக் குலைத்து விரட்டுக்கின்றார்கள். அவர்களை விட நாம் ஒன்றும் அவ்வளவு மோசமல்ல என்று கூறினார். அப்பொழுது லொள் லொள் என்று ஒரே சத்தம். ஆமாம்! ஆமாம் என்று எஞ்சியிருந்த நாய்கள் அனுபவசாலியின் கருத்தை ஆமோதித்தவாறு தலையை கர்வத்துடன் ஆட்டி அசைத்துக் கொண்டு நின்றன.