பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 108 95. காணாத பொழுதிலே கற்பனை விழுதிலே காலாற ஊஞ்சலாடும்! கண்டதோர் நிலையிலே களிப்பென்னும் அலையிலே கைவீசி நீச்சல் போடும்! வீணாக நினைவிலே வெறியூட்டும் முறையிலே விருப்பத்தை ஊட்டி ஆடும்! விருத்தங்கள் பாடிடும் வருத்தங்கள் சூடிடும் விதத்திலே போட்டிபோடும்! தூணாக மாற்றிடும் துரும்பான சேதியை! துளைபோடும் கற்பாறையை!. தேனாக ஆக்கிடும் திசைமாறிப் போனதை! தேவையை உருவாக்கிடும்! மானான நெஞ்சினை மடக்கி உன் சொல்கேட்க வலிவான உடல்வேண்டுமே? வலிவான உடலையே வளமாகக் காக்கவே வழிகாட்ட இறைவனேவா!