பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 08: --- - 100. கவிஞனாய் ஆக்கினாய்! கலைஞனாய் ஊக்கினாய்! - . கருணையால் தடைநீக்கினாய்! கருத்தினை ஊட்டினாய் கற்பனை மூட்டினாய் கனிவுடன் வழிகாட்டினாய்! சுவையெலாம் முனைப்பென சுகம்எலாம் உழைப்பென செல்கின்ற நெறிசாற்றினாய்! சொந்தங்கள் நூல்என, சுகதுக்கம் செயல்என, சுமைதாங்கும் உரம் கூட்டினாய்! நவயுவப் பொருள் ஒன்று நல்மனம் அறிவுஎன்று நாடியே பெறத் தூண்டினாய்! நாட்டத்தின் ஒட்டமும் நலவாழ்வில் வாட்டமும் நனிபொங்கத் திறம்காட்டினாய்! அவையாயும் ஆண்டவன் அருள்மழை யானதே ஆற்றலைத் தினம் தந்ததே! அருமையாய் தேகத்தை அடைந்திட வழிதந்தாய்! ஆண்டவா வழிகாட்டவா! நவனின்,