பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்ட ம் 108 * 101 ஒருநூறு பாடல்கள் - உணர்வோடு எழுதவே உள்ளத்தில் உறுதிதந்தான்! உதிரத்தின் ஓட்டத்தில் உத்வேகம் கொடுத்தவன் உடலுக்கு உறுதிதந்தான்! பொறுமையாய் அமரவும் அருமையாய் எண்ணவும் புத்தியில் தெளிவுதந்தான்! வறுமையில் வீழாமல் வசதிக்கும் வகைசெய்து . . . வாழ்விலே பொலிவுதந்தான்! திருப்பாதம் தொழுகிறேன்! - சிரம் தாழ்த்திப் பணிகிறேன்! தேவனின் முகம்பார்க்கிறேன்! திருநாளில் மகிழ்ச்சிபோல் தினம் தினம் மகிழவே துணைவர அருள் கேட்கிறேன்! வரமென்று சொல்லவோ! அருளென்று கொள்ளவோ! வாழ்வெலாம் நீயல்லவோ! வரும் நாளில் உழைக்கவே வளமான உடலுடன் வாழவே வழிகாட்டவா!