பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவனின் சிந்தனைப் பந்தாட்டம் பிறப்பினை அறிகிலோம்; பிறந்ததை அறிகிலோம்; பிறந்ததோ வாழ்ந்திடத்தான்! இறப்பினை அறிகிலோம்; என்றென்று அறிகிலோம் இருப்பதோ வாழ்ந்திடத்தான்! மறப்பினும் மறுநொடி மனதிலே வருவதோ மணியான வாழ்க்கை முறைதான்! நிரப்பினும் நிரம்பாத நெடுங்கடல் போல ஒரு நெஞ்சத்தை திருப்தியுறத்தான்! துறப்பினும் தொடர்ந் திடும் துரத்திடின் சேர்ந்திடும் துன்பத்தைத் தொலைத்துவிடத்தான்! சிறப்பான வாழ்க்கையில் தினம் மகிழ்ந்தாடிட சிரமங்கள் மேற்கொள்ளத்தான்! வரப்புயர என்றாளே ஒளவையும்! மனிதர்க்கு வாழ்வுயர என்செய்குவோம்?: வரமான வாழ்க்கையைத் தரமாக வாழவே வழிகாட்ட இறைவனே வா!