பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறவுகள் ஆயிரம் உலகினில் துணைவரும்! உண்மையில் துணை அல்லவே! உரிமைகள் ஆயிரம் உலவியே நிதம் வரும் உழன்றாலும் சதம் அல்லவே! அறிவுக்கு ஆயிரம் அனுபவத் தொடர் வரும் அடைந்தாலும் தரமல்லவே! ஆசைக்கு ஆயிரம் கனவுகள் சுகம் வரும் அமைதிக்கு இடமில்லையே! அறம் பொருள் இன்பத்தால் ஆனதே வாழ்க்கையும். அதை பேசும் மனிதனிடமோ ஆண்மையும் ஆற்றலும் அழகுடல் வலிமையும் அரும்பினால் தானே வரும் ! வரைமுறையாகவே உடல்காத்து வாழ்வதே வாழ்க்கையின் இன்பம் அன்றோ!' வரமான வாழ்க்கையைத் தரமாக வாழவே வழிகாட்ட இறைவனே வா! genusoflair