பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணிலும் மண்ணிலும் நீரிலும் நிலத்திலும் விளங்கிடும் உயிர்கள் கோடி! விளங்கிடும் உயிர்களில் கிளர்ந்தவன் ஆள்கிறான் மனிதனே முதன்மை சூடி! வண்ணமும் வடிவமும் வளர்ந்தாடும் நளினமும் வாய்த்தது மனித ஜாதி! வாய்மொழி பேரெழில் சிரிப்போடு சிந்தனை வாய்ப்பதே மனித நீதி! எண்சாண் உடம்பிலும் ஏற்றமும் தோற்றமும் எங்கணும் பொலிந்திருக்கும்! எந்நாளும் வல்லமை இயல்பான ஆளுமை ஏற்றமாய் கிளர்ந்திருக்கும்! அன்றாடம் காப்பதும் = அதற்குரம் அளிப்பதும் அறிவோடு கடமையை செறிவோடு செய்யவே ஆண்டவா வழிகாட்டவா!