பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ー போகின்ற உயிரையே பிடித்தே நிறுத்துவோர் புவியிலே யாருமிலையே! பொழிகின்ற மழையையும் புயற்காற்றை தீயையும் போக்குவார் யாருமிலையே! வேகின்ற உடலினை மண்தின்னும் பாண்டத்தை விரும் பியே காப்பதுமேன்! வேளைகள் வரும் வரை விரட்டுவே ம் காலத்தை விளம்புவோர் இருக்கின்றாரே! போகின்ற உயிரையும் வேகின்ற உடலையும் பொறுப்பாகக் காப்பதும் ஏன்! புதுமையைப் படைக்கின்ற உடலையும் உயிரையும் புண்ணாக்கல் மடமையன்றோ! ஆகிடும் சுவைகளை ஆயிரம் அளிக்கின்ற அமுதநல் சுரபியன்றோ! அறிவுடன் உடல்தனை அனுதினம் காத்திட ஆண்டவா வழிகாட்டவா!