பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தன்னைப் பந்தாட்டம் திடமான பொருட்களே திறமாகப் பொலிந்திடும் தீர்ப்பினை உணர வேண்டும்! திரளான பொருட்களே நிரைவாகத் திகழ்ந்திடும் திண்மையை உணர வேண்டும்! முடமான தடைகளும் முறைபோன விடைகளும் முழுமையைக் காணுமோதான்! முதலான முதலென்று s உடலையே முழுதென்று முன்னுவோர் ஞானம் பெறுவோர்! வடம்போல முறுக்கிய வலுவுள்ள கயிற்றையே மனிதரும் விரும்பி ஏற்பார்! வலுவுள்ள உடலையே வலுவிலே தேடியே மனிதரும் உறவை ஏற்பார்! அடம்பிடித் தழுகின்ற சவலைக் குழந்தையாய் அரற்றுவோர் உணர்வுபெறவே அருமையாம் தேகத்தை பெருமையாய் காத்திட ஆண்டவா வழிகாட்டவா!