பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கூட்டமாய் கூடுவார்! கூச்சல்கள் போடுவார்! குதர்க்கமாய் பேசிமகிழ்வார்! ஆட்டமும் ஆடுவார் ஆதாயம் தேடுவார் அசிங்கமாய் ஏசிமகிழ்வார்! நாட்டு நடப்பையே நாக்கிலே சுழற்றுவார் நானென்று பேசி மகிழ்வார்! நாட்டங்கள் அனைத்திலும் நோட்டங்கள் கூட்டுவார் நாடகம் ஆடி மகிழ்வார்! மீட்டாத வீணையின் நரம்பினைப் போலவே மேனியைப் போர்த்தி வருவார்! ஊட்டங்கள் இல்லாத கழனியின் கதிரைப்போல் உயராது மடங்கி நிற்பார்! வாட்டங்கள் ஏனென்று விளங்காத அறிவிலே வாழ்வையே வருத்திக் கிடப்பார்i வரமான வாழ்க்கையை தரமாக வாழவே வழிகாட்ட இறைவனே வா! தவனின்