பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ பாருக்குள் பார்த்தாலோ பார்வைக்கு அழகனாய் பிறந்தவன் மனிதனேதான்! படைப்புக்குள் சிறந்தவன் பாங்குகள் நிறைந்தவன் பகுத்தறிவாளன் அவன்தான்! நீருக்குள் நீந்துவான், நிலத்துள்ளும் அழுந்துவான் நீள்வானம் தனை அளப்பான்! நினையாத காரியம் நினைத்ததும் முடித்திடும் நிறைமதி கொண்ட வன்தான் ! வேருக்குள் வேர்போல வினைகளை ஆற்றுவான்; வித்தைகள் செய்திடுவான்! விதிமதி என்றவன் வேதம் படித்தாலும் வெறி வந்தால்மறந்திடுவான்! தேருக்கு வடம் போல உயிருக்கு இடமான தேகத்தை மறக்கிறானே! .திகைக்கின்ற வாழ்க்கையை திசைகாட்டி காக்கவே தேவனே வழிகாட்டவா!