பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

经2 ർഖണ്ണിജ് மானாக ஓடலாம் மயிலாக ஆடலாம், மாங்குயில் போல்பாடலாம்! மலைமீதும் ஏறலாம். மடுவிலும் நீந்தலாம். மரத்துக்கு மரம்தாவலாம்! கூனினை நிமிர்த்தலாம், கோனையும் வீழ்த்தலாம். கொள்கையில் பலம் சேர்க்கலாம், குலுக்கிடும் நோய்களின் குரல்வளை .நெறிக்கலாம், குறிக்கோளின் தடை நீக்கலாம்! வீணாக வருத்திடும் மனதினைத் திருத்திடும் வேடிக்கையும் காட்டலாம்! விழியோடும் இடமெல்லாம் பழிபோடும் மனிதரை விந்தையாய்த் திருத்திவிடலாம்! ஆனாலும் இதற்கெல்லாம் அடித்தளம் தேகம்தான்! அதனை நாம் மறக்கிறோமே! ஆதாரம் உடலென்று அறிவுரை தர இன்று ஆண்டவா வழிகாட்டவா!