பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தவனின் வரப்புக்கும் வேலிக்கும் வகையில்லா வயல்களில் விளைச்சலோ இருப்பதில்லை! வளையாத மரங்களும் பெருமாற்றங் கரையிலே வாழ்வதோ உறுதியில்லை! திருப்பங்கள் பலஉண்டு திகைப்பூட்டும் வாழ்க்கையில் தேகத்தைக் காத்துக் கொண்டால்! திசைமாறிப் போகாமல் திறமையாய் வாழலாம்! தேடுகிற சுகமும் பெறலாம்! விருப்பங்கள் பல உண்டு வெற்றிகள் தொடருண்டு வேண்டிய திறனிருந்தால்! விளையாடும் தேகத்தில் வளங்கூடி வாழ்ந்தாலே விதிகூட வழிமாறுமே! பொறுப்பில்லா மாந்தரோ புதுப்பாதை என்கிறார் உடல்தமை வதைக்கிறாரே! புரியாத மனிதர்க்கும் பொறுப்பினை ஊட்டவே புண்ணியா வழிகாட்டவா!