பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 27 19. அலைபாயும் மனதினை அடக்கவே வேண்டுமெனில் அறிவுதான் அடக்க வேண்டும்! அறிவுக்குத் திறமையும் அடக்கமும் வேண்டுமெனில் அனுபவம் பெருக்க வேண்டும்! இலைமறைக் காய்கள் போல் ஏற்கின்ற அனுபவம் எண்ணத்தில் படிய வேண்டும்! எண் ணங்கள் தெளிவுடன் இடம் பெறல் என்றி.டின் இதயத்தில் வலிமை வேண்டும் : மலைக்குள்ளும் வழிகளைத் துளை போட்டுப் போகின்ற வலிமையும் மனதுக்குண்டு! மனம் பெறும் வலிமையோ வளம்பெறும் தேகத்தின் மாண்பான பலத்துக்குண்டு! அலைகடல் நீச்சல் போல் அன்றாடம் வாழ்விலே ஆட்டங்கள் போடுகின்றோம்! ஆனாலும் உடல்தமை அன்றாடம் மறக்கிறோம் ஆண்டவா வழிகாட்டவா!